உள்நாடுபிராந்தியம்

வவுனியாவில் விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் – 23 வயதுடைய இளைஞன் பலி!

வவுனியாவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலையில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மின்சார கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் கிளிநொச்சி, பாரதிபுரத்தை சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா, புளியங்குளம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Related posts

கிறிஸ்மஸ் தினமன்று சிறைக் கைதிகளை பார்வையிட தடை

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் பிரதமர் ஹரிணி

editor

மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் அறிவித்தல்