உள்நாடுபிராந்தியம்

ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவில் கூட்டமாக வந்த காட்டு யானைகள்!

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட தியாவட்டவான் கொழும்பு பிரதான வீதி பகுதியில் இன்று சனிக்கிழமை (26) நள்ளிரவு வேளையில் கூட்டமாக காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் ஊடுருவியதால் பிரதேச மக்கள் பெரும் அச்சத்தை எதிர் கொண்டனர்.

காட்டு யானைகளை குடியிருப்பு பகுதிக்குள் உள் நுழையாமல் விரட்டும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டது.

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் எம்.எச்.எம்.பைறூஸ் மற்றும் கல்குடா அனர்த்த அவசர சேவைப் பிரிவினர், அகீல் எமெர்ஜன்ஸி பிரிவு இளைஞர்களின் ஒத்துழைப்புடன் யானைகள் காட்டுப் பகுதிக்குள் விரட்டப்பட்டன.

இந்த துரித நடவடிக்கைகளை மேற்கொண்ட அனைவருக்கும் பிரதேச மக்கள் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

-எச்.எம்.எம்.பர்ஸான்

Related posts

முஸ்லிம் தனியார் சட்டத்தில் தலையிடுவதற்கு தேசிய மக்கள் சக்திக்கு உரிமை இல்லை – முஜிபுர் ரஹ்மான்

editor

கற்பிட்டியில் காற்றாலை உடைந்து வீழ்ந்ததில் மூன்று வீடுகள் சேதம்

editor

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு