உள்நாடுபிராந்தியம்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்தில் சிக்கியது – 16 பேர் காயம்

பெலியத்த – வீரகெட்டிய வீதியில் பெலியத்த பகுதியில் இன்று (23) காலை 7.30 மணியளவில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

விபத்தில் சுமார் 16 பாடசாலை மாணவர்கள் காயமடைந்து பெலியத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் சிலர் தற்போது வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.

பேருந்து வீதியை விட்டு விலகி வீதியின் ஓரத்தில் மோதி நின்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தற்போது, 13 பாடசாலை மாணவர்கள் பெலியத்த, பெலிகல்ல, தங்காலை மற்றும் வீரகெட்டிய வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts

மின்சார கட்டணம் செலுத்தப்படாமை பொதுச் சந்தை மின் துண்டிப்பு – பின்னர் சீரமைக்கப்பட்டதாக தகவல்

editor

அசாத் சாலி தொடர்பான விசாரணைகள் நிறைவு – சட்டமா அதிபர்

எனது முதலாவது வாழ்த்துச் செய்தியை வழங்குவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன் – பிரதமர் ஹரிணி

editor