அரசியல்உள்நாடு

எதிர்க்கட்சித் திட்டத்திற்கு தேசிய அளவிலான வேலைத்திட்டம் அவசியம் – ஐக்கிய மக்கள் சக்தி

ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர்கள், அரசாங்கத்திற்கு எதிராக வலுவான எதிர்க்கட்சியாக செயல்பட தேசிய அளவிலான வேலைத்திட்டம் அவசியம் என வலியுறுத்தியுள்ளனர்.

தற்போது உள்ள அரசியல் இடைவெளிகளை நிரப்ப, ஐக்கிய மக்கள் சக்தி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயல்பட வேண்டும் என கூறப்படுகிறது.

கட்சி தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலில், கிராமப்புற மக்களை அரசியல் திட்டத்தில் இணைக்க வழி வகுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

எனினும், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பணியாற்றுவது பற்றி இன்னும் உறுதியான முடிவை எடுக்கவில்லை.

மேலும், தேசிய அளவிலான திட்டம் செயல்படுத்தப்பட்ட பின்னர், புதிய அமைப்பாளர்கள் நியமிக்கவும், திறமையற்ற நிர்வாகிகளை நீக்கவும் வேண்டும் என சிரேஷ்ட உறுப்பினர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

Related posts

ஜனாதிபதியின் காலம்: அமைச்சரவையிலும், பாராளுமன்றிலும் சமர்ப்பிக்கப்படும் சட்டமூலம்

பாத்திமா ஆய்ஷா : பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படவில்லை

இலங்கையில் புதிதாக எரிபொருள் நிறுவனம் ஒன்றை உருவாக்க அமைச்சரவை அனுமதி