உள்நாடுபிராந்தியம்

யாழ்ப்பாணம் சிறைச்சாலை அதிகாரியின் வீட்டுக்கு தீ வைத்த இனந்தெரியாதோர்!

யாழ்ப்பாண சிறைச்சாலையில் பணியாற்றும் சிறை அதிகாரி ஒருவரின் வீட்டுக்கு இன்று (15) அதிகாலையில் அடையாளம் தெரியாத குழு ஒன்று தீ வைத்து எரித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

கொழும்புத்துறை பகுதியில் உள்ள குறித்த வீட்டில் அதிகாரியும் அவரது குடும்பத்தினரும் உறங்கிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீட்டின் முன்புறத்தில் பெற்றோல் ஊற்றி தீ வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தீ பரவத் தொடங்கியதும் குடும்பத்தினர் விழித்தெழுந்து தீயை அணைத்து சேதத்தைத் தவிர்த்தனர்.

யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

உயர் நீதிமன்றத்தின் நடவடிக்கைகளை ஆரம்பிக்க நடவடிக்கை

மட்டக்களப்பு மாவட்ட விஷேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் – பல முன்மொழிவுகளை முன்வைத்த ஹிஸ்புல்லாஹ் எம்.பி

editor

மஹிந்தானந்தவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு