ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி அஜித் பி பெரேரா, உட்கட்டமைப்பு மற்றும் மூலோபாய மேம்பாடு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
இதனையடுத்து ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார், அந்தக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மரிக்கரின் பெயரை நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா முன்மொழிய பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான வழிமொழிந்தார்.