வட காஸாவில் நேற்றிரவு (7) நடைபெற்ற வான்வழித் தாக்குதலில் 5 இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இது குறித்து காஸா சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
காஸாவில் நேற்றிரவு (7) நடைபெற்ற வான்வழித் தாக்குதலில் 5 இஸ்ரேலிய வீரர்கள் பலியாகினர். மேலும் இரண்டு இடங்களில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 18 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலிய வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது வெடிபொருட்கள் வெடித்ததாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்தன.
இஸ்ரேலும் ஹமாஸும் அமெரிக்க ஆதரவுடன் கூடிய போர்நிறுத்த திட்டத்தைப் பரிசீலித்து வரும் நிலையில், இஸ்ரேஸ் இராணுவம் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகிறமை குறிப்பிடத்தக்கது.