அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல்!

முன்னாள் அமைச்சர் எஸ்.எம் சந்திரசேனவை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு புதுக்கடை நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (04 ) பிற்பகல் உத்தரவிட்டுள்ளது.

எஸ்.எம் சந்திரசேன, 2015 ஜனாதிபதி தேர்தலின் போது தனது அன்புக்குரியவர்களுக்கு 25 மில்லியன் ரூபா பெறுமதியான சோளங்களை வழங்கியமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று காலை முன்னிலையாகியிருந்த போது இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட நிலையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இணையவழி கற்பித்தல் பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தும்

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2674 ஆக உயர்வு

பிள்ளையான் பிணையில் விடுதலை