உலகம்

ஜப்பானில் 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம்

பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் ஜப்பான் இருப்பதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது.

அதன்படி அங்குள்ள டோகாரா தீவில் கடந்த 2 வாரங்களில் அங்கு 900-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் பதிவாகி உள்ளன.

இதில் மிகப்பெரிய நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 5.5 புள்ளிகளாக பதிவானது.

இதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

அதேசமயம் எப்போது வேண்டுமானாலும் வெளியேற தயாராக இருக்குமாறு பொதுமக்களை அரசாங்கம் அறிவுறுத்தி உள்ளது.

இதற்காக டோகாரா கடற்கரை பகுதியில் படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

எனினும் இந்த நிலநடுக்கத்தால் அங்கு வசிக்கும் மக்க்கள் பீதியில் உறைந்து காணப்படுகின்றனர்.

Related posts

ஆப்கானிலிருந்து பயணிகள் விமானத்தின் சக்கரப் பகுதியில் அமா்ந்து டெல்லிக்கு வந்த 13 வயதுடைய சிறுவன்

editor

காசாவில் உடனடியாக தாக்குதல்கள் நடத்துங்கள் – பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவு – போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்

editor

இலங்கையின் சுதந்திரதினத்தன்று – பிரிட்டனில் மாபெரும் கண்டனப் பேரணி