உள்நாடு

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து – ஒருவர் பலி – 07 பேர் காயம்

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் 76.5 ஆவது கிலோமீற்றர் மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 07 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று புதன்கிழமை (02) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சொகுசு பஸ் ஒன்று மோட்டார் சைக்கிள்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்றின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது சொகுசு பஸ்ஸில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 07 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மன்னாரில் வெள்ளப் பாதிப்பு – தொடர்ந்தும் களத்தில் நிற்கும் ரிஷாட் எம்.பி

editor

நகர அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர்களுக்கு பிணை

editor

வடக்கு கிழக்கு மக்களின் சகல பிரச்சினைகளும் தீர்க்கப்படும் – மஹிந்தானந்த அளுத்கமகே [VIDEO]