உள்நாடுபிராந்தியம்

போலி டொலர்களுடன் 45 வயதுடைய நபரொருவர் கைது

ஆறு போலி டொலர் நாணயத்தாள்களுடன் மினுவாங்கொடை பொலிஸாரால் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மினுவாங்கொடை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (01) பிற்பகல் மினுவாங்கொடை நகரில் உள்ள ஒரு வங்கியில் சோதனை நடத்தப்பட்டது.

இதன்போது 06 போலி டொலர் நாணயத்தாள்களுடன் சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் ரஸ்நாயக்கபுர பகுதியை சேர்ந்த 45 வயதானவர் என தெரியவந்துள்ளதுடன், மினுவாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

அமைப்பாளர்கள் இராஜினாமா – ஐக்கிய மக்கள் சக்திக்குள் பெரும் நெருக்கடி

editor

திங்கள் முதல் 1,500 பஸ்கள் மேலதிக சேவையில்

ஜனாதிபதி அநுரவின் தீர்மானத்தை இடை நிறுத்தியது தேர்தல் ஆணைக்குழு

editor