உள்நாடு

பேருந்து கட்டணம் குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

எதிர்வரும் ஜூலை 4ஆம் திகதி முதல் பேருந்து கட்டணத்தை 0.55% ஆல் குறைக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த ஆணைக்குழு, 2025ஆம் ஆண்டிற்கான வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் 2.5% ஆல் குறைப்பதற்கு அவதானம் செலுத்தப்பட்டாலும் எரிபொருள் விலை சூத்திரத்தின் அடிப்படையில் மாதாந்த எரிபொருள் விலை திருத்திற்கு அமைவாக எரிபொருள் விலை அவதானிக்கப்பட்ட பின்னர் புதிய பேருந்து கட்டண திருத்தம் 0.55% ஆல் குறைக்கப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், குறைந்தபட்ச கட்டணத்தில் எந்தவொரு திருத்தமும் செய்யப்படவில்லை எனவும் ஆணைக்குழு கூறியுள்ளது.

அதன்படி, எதிர்வரும் ஜூலை 4ஆம் திகதி நள்ளிரவு முதல் இந்த புதிய பேருந்து கட்டணம் அமுலுக்கு வருவதாகவும் ஆணைக்குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Related posts

அறுகம்பை பகுதியில் சோதனை நடவடிக்கை

editor

மறு அறிவிப்பு வரும் வரை அரச ஊழியர்களுக்கான அறிவிப்பு

ஏப்ரல் 21 தாக்குதல் : அமைச்சரவையில் இன்று அறிக்கை சமர்ப்பிப்பு