அரசியல்உள்நாடு

முன்னாள் எம்.பி ஹிருணிகா உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

கருவாத்தோட்டம் பொலிஸ் பிரிவில் வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் 15 சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கை டிசம்பர் 8 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (30) உத்தரவிட்டுள்ளது.

இந்த முறைப்பாடு இன்று கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதன்போது, ​​இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் முடிந்துவிட்டதாகவும், அறிக்கைகள் சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கருவாத்தோட்ட பொலிஸார் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்.

அதன்படி, வழக்கு விசாரணைகளை டிசம்பர் 8 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்ட நீதவான், அன்றைய தினம் சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்கள் குறித்து நீதிமன்றத்திற்குத் தெரிவிக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தினார்.

2023 ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் வீதி நாடகம் ஒன்றை ஏற்பாடு செய்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாக ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக பொலிஸார் இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.

Related posts

நாடு முழுவதும் கனமழை – நிரம்பி வழியும் நீர்த்தேக்கங்கள்

editor

தடுப்பூசி : அவசர சிகிச்சைப் பிரிவுகளும் தயார் நிலையில்

உறுமய தேசிய செயற்பாட்டு செயலகம் ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் திறந்து வைப்பு!