அமெரிக்காவின் டெக்ஷாஸ் மாநிலத்தில் சீனப் பிரஜைகள் சொத்து வாங்குவதை தடை செய்வதற்கான மசோதாவில் ஆளுநர் கிரெக் அபோட் கையெழுத்திட்டுள்ளார்.
சீனா உட்பட ஈரான், வட கொரியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளது பிரஜைகளையும் இலக்கு வைத்து இம்மசோதா அறமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மசோதாவில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ள ஆளுநர் கிரெக் அபோட், சீனா, ஈரான், வட கொரியா மற்றும் ரஷ்ய ஆகிய நாடுகளைச் சேர்ந்த தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் எமது மாநிலத்தில் சொத்து வாங்குவதைத் தடுக்கும் இச்சட்டம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி நடைமுறைக்கு வரும்.
என்றாலும் அமெரிக்காவின் கிறீன் கார்ட் வைத்திருப்பவர்களுக்கும் அமெரிக்க பிரஜைகளுக்கும் இச்சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றுள்ளார் இம்மசோதாவுக்கு எதிராக சமூக ஆர்வலர்கள் வழக்கு தாக்கல் செய்யவிருப்பதாகத் தகவல்கள் வௌியாகியுள்ளது.
அதனால் இவ்விவகாரம் சட்ட மற்றும் அரசியல் விவகாரமாக உருவெடுக்கும் என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
டெக்சாஸில் வெளிநாட்டு எதிரிகளின் நடவடிக்கைகள் இடம்பெறுவதைத் தடுக்க இப்புதிய சட்டம் மிகவும் முக்கியமானது.
மிச்சிகனில் உயிரியல் ஆயுதங்களை கடத்த முயன்ற சீன நாட்டினர் இம்மாதம் கைது செய்யப்பட்டனர்’ என்று குறிப்பிட்டுள்ள அபோட்டின் செய்தித் தொடர்பாளர் அண்ட்ரூ மஹலேரிஸ், ‘நமது நாடு வெளிநாட்டு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வது உண்மை.
அதனால் நமக்கு தீங்கு விளைவிக்க விரும்புபவர்களிடமிருந்து நாம் பாதுகாப்பு பெற வேண்டும் என்றுள்ளார்.
இந்த மசோதா குறித்து குடியரசுக் கட்சி மாநில செனட்டர் லொயிஸ் கோல்கோர்ஸ்ட் குறிப்பிடுகையில், ‘நமது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும் எந்தவொரு நாட்டிற்கும் டெக்ஷாஸ் விற்பனைக்கு இல்லை’ என்றுள்ளார்.
-என்.பி.சி நியூஸ்