அரசியல்உள்நாடு

ஹட்டன்-டிக்கோயா நகர சபையின் பிரதி தவிசாளர் பதவி இ.தொ.கா வசம்!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவுடன்
ஹட்டன்-டிக்கோயா நகர சபையில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ளது.

ஹட்டன்-டிக்கோயா நகர சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான ஒன்று கூடலானது, மத்திய மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஏ.எம்.கே.சி.கே அத்தபத்து அவர்களின் தலைமையில் இன்று(26) ஹட்டன்-டிக்கோயா நகர சபை ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது பகிரங்க வாக்கெடுப்பினூடாக தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் சுரேந்திர ஆரச்சிலாகே அசோக கருணாரத்ன 08 வாக்குகளைப் பெற்று தவிசாளரானார்.

மேலும் ஹட்டன்-டிக்கோயா நகர சபையின் பிரதி தவிசாளராக இ.தொ.கா உறுப்பினர் பெருமாள் சுரேந்திரன் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளார்.

குறிப்பாக ஹட்டன்-டிக்கோயா நகர சபையின் தவிசாளர் பதவிக்காக தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர்.

இதில் தே.ம.ச வேட்பாளர் 08 வாக்குகளை பெற்று தவிசாளர் ஆனதுடன்., ஐ.ம.ச வேட்பாளர் 07 வாக்குகளை மாத்திரமே பெற்றுக்கொண்டார்.

மொத்தமாக ஹட்டன்-டிக்கோயா நகர சபைக்காக 15 உறுப்பினர்கள் தேர்வாகி சபை உறுப்பினர் அங்கீகாரம் பெற்றுள்ளனர்.

Related posts

பிரதமர் – இந்திய வெளிவிவகாரச் செயலாளர் இடையே சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த இ.தொ.காவின் முக்கியஸ்தர்கள்

editor

ஜனாதிபதி மாளிகையை குத்தகைக்கு வழங்க எதிர்ப்பு!