உலகம்சூடான செய்திகள் 1

மெளனம் கலைந்த சவூதி: அமெரிக்காவின் தாக்குதலுக்கு எதிராக சவூதி கண்டனம்!

ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதற்கு சவுதி அரேபியா கண்டனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் தாக்குதலுக்கு எதிராகவும், மத்திய கிழக்கு நாடுகளில் உருவாகியுள்ள பதற்றத்தைத் தணிக்கும் வகையிலும் உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

இது குறித்து சவுதி அரேபியாவின் வெளியுறவுத் துறை அமைச்சரகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சவுதி அரேபியாவின் சகோதர நாடான ஈரானின் சமீபத்திய நிலையை கவனித்து வருகிறோம். ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா குண்டு வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது பெரும் கவலை அளிக்கிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பதற்றத்தைத் தவிர்க்கவும், கட்டுப்பாடுகளைக் கடைபிடிக்கவும் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். இத்தகைய தீவிரமான சூழலைத் தணிக்கும் நோக்கத்தில், அரசியல் ரீதியில் தீர்வு காணவும், போரைத் தவிர்க்கவும் உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, சவூதி அரேபியா தனது நாட்டின் பாதுகாப்பை அதிகரித்துள்ளதகவும் அறிவித்துள்ளது!

Related posts

கொழும்பு பெரிய பள்ளிவாசலின் முக்கிய அறிவித்தல் இதோ…..

வடகொரியாவில் கொரோனா இல்லை

மஹிந்தவிற்கு எதிரான தடையுத்தரவை நீக்குமாறு தாக்கல் செய்த மனு ஒத்திவைக்கப்பட்டது