உள்நாடுபிராந்தியம்

போதை மாத்திரைகளுடன் 37 வயதுடைய பெண் கைது!

குருணாகல் – வாரியப்பொல, வலஸ்பிட்டிய வத்த பகுதியில் போதை மாத்திரைகளுடன் பெண் ஒருவர் மாவத்தகம பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) கைது செய்யப்பட்டுள்ளார்.

மாவத்தகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபரான பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் புத்தளம், முந்தல் பகுதியில் வசிக்கும் 37 வயதுடைய ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் பெண் ஊழியர் ஆவார்.

சந்தேக நபரான பெண்ணிடமிருந்து 9657 போதை மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவத்தகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கிழக்கு மாகாணத்தில் சோலார் பேனல்களை நிறுவுவதற்கு – மின்சக்தி அமைச்சர் இணக்கம்!

புதிய அஸ்வெசும விண்ணப்பங்கள் இன்று முதல்!

வர்த்தகர் தினேஷ் ஷாப்டரை படுகொலை செய்துள்ளதாக நீதிமன்றம் அறிவிப்பு