இராணுவ சேவையிலிருந்து சட்டபூர்வமாக ஓய்வுபெற்ற 45 வயதுக்கு உட்பட்ட 10,000 பேரை பொலிஸ் சேவையில் சேர்க்க திட்டமிட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
தம்புத்தேகம பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தைத் திறக்கும் நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர், இவ்வான நபர்களை 5 ஆண்டுகளுக்குச் சேர்ப்பதற்கான தொடர்புடைய அமைச்சரவைப் பத்திரம் இன்று அமைச்சரவையில் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என்று கூறினார்.
மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், போதைப்பொருளுக்கு அடிமையாகும் அபாயத்தில் உள்ள சுமார் 7,880 சிறுவர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கூறினார்.