உள்நாடு

மின்சார தடைகள் குறித்து வெளியான அறிவிப்பு

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இன்று (01) பிற்பகல் 5 மணிவரை நாடு முழுவதும் 70,012 மின்சார தடைகள் பதிவாகியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இவற்றில், 41,684 மின்சார தடைகள் சரிசெய்யப்பட்டு மின் விநியோகம் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் பொறியாளர் தம்மிக்க விமலரத்ன தெரிவித்தார்.

மீதமுள்ள மின்சார தடைகளை விரைவாக சரிசெய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதற்காக மேலதிக குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

நாடு திரும்பும் இலங்கையர்களின் தனிமைப்படுத்தல் காலம் தொடர்பிலான அறிவிப்பு

கொழும்பு பல்கலையிலிருந்து வௌியான புதிய உற்பத்திகள்!

குற்றவாளிகளை அரசு ஒருபோதும் பாதுகாக்காது