உள்நாடு

நீர்கொழும்பு பகுதியில் துப்பாக்கிச் சூடு – இருவர் கைது

நீர்கொழும்பு, தலாதுவ பிரதேசத்தில் இன்று (28) பிற்பகல் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடந்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2 நபர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் மற்ற நபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கிச் சூட்டில் எந்த உயிர் பலியும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நீர்கொழும்பு பொலிஸார் சம்பந்தப்பட்ட 2 நபர்களையும் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் அந்த துப்பாக்கிக்கு சட்டப்பூர்வ உரிமம் உள்ளதாகவும், சம்பந்தப்பட்ட நபர் ஒரு பிரபலமான தொழிலதிபர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இந்தியாவின் தனித்துவமான சாதனை தொடர்பில் ஜனாதிபதியின் மனப்பூர்வமான வாழ்த்து

குளிக்கச் சென்ற இரண்டு சிறுவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி பலி

editor

பல்கலைகழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் திடீர் மரணம்!