உள்நாடு

தேசபந்து தென்னகோன் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

அரசியலமைப்பு சபையின் முறையான ஒப்புதல் இல்லாமல் தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபராக நியமிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்த முடிவு அரசியலமைப்பிற்கு முரணானது என்று தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மனுக்கள் இன்று (28) நீதிபதிகள் ஜனக் டி சில்வா, சோபித ராஜகருணா மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதன்போது மனுக்களை செப்டம்பர் 8 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related posts

மக்களின் வரிப்பணத்தை ஏமாற்றாத, விரயமாக்காத அரசியல் முன்மாதிரியை நாம் உருவாக்கி இருக்கிறோம் – ஜனாதிபதி அநுர

editor

இராஜாங்க அமைச்சராக சுசில் பிரேமஜயந்த

பிரதமர் பதவி விலகியதன் பின் அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி தீர்மானம்