உள்நாடுபிராந்தியம்

மோட்டார் சைக்கிள் விபத்து – ஓட்டமாவடியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் மரணம்!

மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் நேற்றிரவு (25) 9.30 மணியளவில் வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிச்சங்கேணி பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.

மூன்று மோட்டார் சைக்கிளில் ஆறு நண்பர்கள் கிண்ணியாவுக்கு சென்று ஓட்டமாவடி பகுதியை நோக்கி வந்த போதே விபத்தில் சிக்கி இரு இளைஞர்கள் மரணமடைந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பனிச்சங்கேணி பாலத்தில் மோதியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதில், ஓட்டமாவடி – பதுரியா நகர் ஆலையடி வீதியைச் சேர்ந்த முகம்மது உசனார் அப்துல் சாஜித், ஓட்டமாவடி – சூடுபத்தினசேனை பகுதியைச் சேர்ந்த முகம்மது அஸ்மி முகம்மது அஸாம் எனும் 19 வயதுகளுடைய இரு இளைஞர்களே மரணமடைந்துள்ளனர்.

மரணமடைந்த இரு இளைஞர்களின் உடல்களும் வாகரை வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பின்னர் நள்ளிரவு 2 மணியளவில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டது.

மரணமடைந்த இரு இளைஞர்களின் உடல்களும் பரிசோதனை நடவடிக்கைகளுக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-எச்.எம்.எம்.பர்ஸான்

Related posts

நிச்சயம் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை வென்றெடுப்போம் – வடிவேல் சுரேஷ்

editor

கொழும்பில் பல வீதிகள் மூடப்பட்டுள்ளது- அதிவேக நெடுஞ்சாலையில் வாகனம் செலுத்துவோருக்கும் எச்சரிக்கை

15 வயது மாணவி குளிப்பதை வீடியோ எடுத்த நபர் கைது

editor