தேசிய தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவவின் வாகனம் மீது தாக்குதல் நடத்தி துப்பாக்கிப் பிரயோக விவகாரத்தில் பெண் ஒருவர் உட்பட மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு குற்றப் பிரிவு இந்த சந்தேக நபர்களை மஹரகமவில் கைது செய்து, பின்னர் அவர்களை புதுக்கடை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மே (29) வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.