பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் கண்டி பிரிவின் அதிகாரிகளால் சுமார் 5 கோடி ரூபா பெறுமதியான 35 கிலோ குஷ் கைப்பற்றப்பட்டது.
சீதுவை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த போதைப்பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.
இந்த போதைப்பொருட்கள் மன்னார் பகுதியில் இருந்து லொறியில் கொண்டு வரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.