முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட ஐந்து பேரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அவர்கள் இன்று (19) மஹர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கிரிபத்கொடையில் அமைந்துள்ள காணி தொடர்பான வழக்கில் இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.