உள்நாடு

இலங்கையில் ஏற்படும் 70 சதவீத மரணத்திற்கான காரணத்தை வெளியிட்ட சுகாதார அமைச்சு

இலங்கையில் ஏற்படும் மொத்த மரணங்களில் 70 சதவீதம், உயர் இரத்த அழுத்தத்தால் ஏற்படும் நோய்களால் நிகழ்கின்றன என சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த பிரிவின் விசேட வைத்தியர் சமிந்தி சமரகோன் கூறுகையில், 2021ஆம் ஆண்டு தொற்றா நோய்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், நாட்டு மக்களில் 34.8 சதவீதமானோர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இவர்களில் 64 சதவீதமானோர் இதற்கு எவ்வித மருந்துகளையும் பயன்படுத்தவில்லை எனவும் விசேட வைத்தியர் சமிந்தி சமரகோன் தெரிவித்தார்.

Related posts

அரசு ஊழியர்கள் கோரும் சம்பள உயர்வை வழங்க முடியாது.

தபால் திணைக்களத்தின் அனைத்து தொழிற்சங்கங்களும் பணிப்புறக்கணிப்பில்

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 114 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்

editor