உள்நாடுபிராந்தியம்

பேருந்தின் சில்லில் சிக்கி 30 வயது ஆணும் 22 வயது இளம் பெண்ணும் பலி

மாத்தறை எலியகந்த பிரதேசத்தில் நடந்த வாகன விபத்தில் ஆணும் இளம்பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

இன்று (13) இரவு 7 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

பேருந்து ஒன்றை முந்திச் செல்ல முயன்றபோது, மோட்டார் சைக்கிள் வழுக்கி, பேருந்தின் பின்புறச் சக்கரத்தின் கீழ் இருவரும் சிக்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில், மாத்தறை தெலிஜ்ஜவில பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயது ஆணும், மாத்தறை காசிவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண்ணும் உயிரிழந்துள்ளனர்.

Related posts

திடீர் சுகயீனம் காரணமாக வெளிநாட்டுப் பெண் மரணம்

editor

தேசிய வர்த்தக கோப்பகத்தின் முதல் அச்சுப் பிரதி பிரதமரிடம் கையளிப்பு

editor

வில்பத்து தேசிய பூங்கா ஊடாக வீதி அமைக்கப்பட மாட்டாது – நீதிமன்றம்

editor