முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2022 முதல் 2024 வரை 23 வெளிநாட்டுப் பயணங்களில் பங்கேற்றுள்ளதாக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (08) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2022 ஆம் ஆண்டில் 4 வெளிநாட்டுப் பயணங்களிலும், 2023 ஆம் ஆண்டில் 14 வெளிநாட்டுப் பயணங்களிலும், 2024 ஆம் ஆண்டில் 5 வெளிநாட்டுப் பயணங்களிலும் பங்கேற்றுள்ளதாக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெளிநாட்டுப் பயணங்களுக்கும் அவர் சார்பாக பிரதிநிதிகள் கலந்து கொண்ட வெளிநாட்டுப் பயணங்களுக்கும் செலவிடப்பட்ட தொகை 102 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும் என்று அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.