அரசியல்உள்நாடு

சர்வ கட்சி மாநாடு – ஜனாதிபதி அநுரவுக்கு நன்றி தெரிவித்த திலித் ஜயவீர எம்.பி

இந்த நெருக்கடியான மற்றும் சவாலான காலங்களில் சர்வக் கட்சி மாநாட்டைக் கூட்ட வேண்டும் என்ற கோரிக்கைக்கு அமைய கிடைத்த சாதகமான பதிலுக்கு சர்வஜன அதிகாரத்தின் தலைவர் திலித் ஜயவீர நன்றி தெரிவித்துள்ளார்.

அனைத்து உள்ளூர் தொழில்முனைவோர் சார்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் அரசாங்கத்திற்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக திலித் ஜயவீர சுட்டிக்காட்டுகிறார்.

இந்த நாட்டு மக்களின் நல்வாழ்வு மற்றும் செழிப்பை எல்லாவற்றிற்கும் மேலாகக் கருதி, தானும் எதிர்க்கட்சித் தலைவர்களும் அரசாங்கத்தை எல்லா வழிகளிலும் ஆதரிக்கத் தயாராக இருப்பதாகவும், அவர் கூறியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினரும் சர்வஜன அதிகாரத்தின் தலைவருமான திலித் ஜயவீர தனது X கணக்கில் பதிவிட்டு இந்தக் கருத்தை வௌியிட்டுள்ளார்.

Related posts

நவம்பர் 14 ஆம் திகதி பாராளுமன்றத்தை சுத்தம் செய்வதற்கான சிரமதான நாள் – ஜனாதிபதி அநுர

editor

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு திரும்பிய 98 பேர்

அறிவித்தலின்றி பயணித்த ரயிலில் மோதுண்டு 10க்கும் மேற்பட்ட மாடுகள் பலி