அரசியல்உள்நாடு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – தபால் ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக அனைத்து தபால் ஊழியர்களினதும் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

தபால் ஊழியர்களின் விடுமுறைகள் அனைத்தும் இன்று முதல் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிறைவடையும் வரை தபால் ஊழியர்களின் விடுமுறைகளை இரத்து செய்துள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாலேயே விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

Related posts

தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியல் குறித்து பாதுகாப்பு அமைச்சின் அறிவித்தல்

சீன உர நிறுவனத்துக்கு பணம் செலுத்துவது தொடர்பில் ஜனவரியில் தீர்மானம்

மட்டக்களப்பில் 2362 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்