அரசியல்உள்நாடு

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் – திகதியை அறிவித்தார் ஜனாதிபதி அநுர

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 5 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

அதே நேரத்தில் சம்பூர் மின் உற்பத்தி நிலையத்தின் கட்டுமானப் பணிகளும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டின் ஸ்திரத்தன்மை காரணமாக அரச தலைவர் ஒருவர் இலங்கைக்கு வருகை தருவதாகவும் தெரிவித்தார்.

Related posts

நாட்டின் பல பாகங்களில் இடியுடன் கூடிய மழை

“ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல்”

மீண்டும் இயங்கும் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம்

editor