உள்நாடுபிராந்தியம்

திடீரென தீ பற்றி எரிந்த முச்சக்கரவண்டி

ஹொரணை வைத்தியசாலைக்கு முன்பாக பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீ பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்து இன்று வியாழக்கிழமை (06) இடம்பெற்றுள்ளது.

தீ விபத்தின் போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், தீ விபத்தில் முச்சக்கரவண்டியானது முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

மாநகர சபையின் தீயணைப்பு படையினர் இணைந்து தீப்பரவலை கட்டுப்படுத்தியதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related posts

சமூகவலைத்தளங்களில் அனுர வெற்றிபெற்றாலும் 21ஆம் திகதி ரணில் வெற்றி பெறுவார் – ருவன் விஜேவர்தன

editor

ஜனாதிபதி கெரவலப்பிட்டியவிற்கு திடீர் விஜயம்

இயற்கையின் கோரம் : 23 வயதுடைய யுவதியின் சடலம் மீட்பு