உலகம்

இந்தியாவில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

மணிப்பூரில் இன்று (05) காலை 11.06 மணியளவில் 5.7 ரிக்டர் அளவில் முதல் நிலநடுக்கம் பதிவானது.

அடுத்ததாக மதியம் 12.20 மணியளவில் 4.1 ரிக்டர் அளவில் 2 ஆவது நிலநடுக்கம் பதிவானதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மணிப்பூரில் பல கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மணிப்பூரில் ஏற்பட்ட நிலநடுக்கம் அண்டை மாநிலங்களான அசாம், மேகலாயாவிலும் உணரப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

Related posts

மற்றுமொரு கொடிய நோய் குறித்து WHO எச்சரிக்கை

சிலி, ஆர்ஜன்டீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

editor

11 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் விமானத்தை தேடும் மலேசியா

editor