அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்த ஜனாதிபதிக்கும் இராணுவ உயரதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்த கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (25) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இராணுவ உயர் அதிகாரிகளுடனான இந்தக் கலந்துரையாடலின் போது, இலங்கையின் பாதுகாப்பு நிலைமை தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டது.

பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

-ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Related posts

நாட்டின் ஏற்றுமதித் தொழில்களை அமெரிக்க வரியிலிருந்து பாதுகாக்க சஜித் பிரேமதாச பல யோசனைகளை முன்வைத்தார்

editor

 ஏப்ரல் 10 முதல் விசேட பஸ் சேவை

அமைச்சரவை ஊடகப் பேச்சாளராக நலிந்த ஜயதிஸ்ஸ நியமனம்

editor