உள்நாடு

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து நான்கு கைதிகள் தப்பியோட்டம்

பொலன்னறுவை, கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து நான்கு கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு தப்பிச் சென்றவர்கள் போதைப் பழக்கத்திற்கு கடுமையாக அடிமையாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

தப்பியோடிய கைதிகள் 29 முதல் 34 வயதுக்குட்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து பல கைதிகள் தப்பிச் சென்றதாக தகவல்கள் வௌியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கடந்த 24 மணி நேரத்தில் 428 பேர் கைது

ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் உத்தியோகபூர்வமாக அறிவிக்க உள்ளது

ETI மற்றும் சுவர்ணமஹால் முதலீட்டாளர்களுக்கு நட்டஈடு கொடுப்பனவு