அரசியல்உள்நாடு

ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றிய 59 இலங்கையர்கள் உயிரிழப்பு – அமைச்சர் விஜித ஹேரத்

ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்களில் 2025 ஜனவரி 20ஆம் திகதி வரையில் 59 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் இன்று (07) எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (07) பாராளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார்.

ரஷ்ய இராணுவத்தில் 554 இலங்கையர்கள் இணைந்துள்ளதாகவும், அவர்களில் யாரும் வலுக்கட்டாயமாக ஆட்சேர்ப்பு செய்யப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த நாட்டிலுள்ள அவர்களில் உறவினர்களுடன் தொடர்பைப் பேணுவதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்குமாறு ரஷ்யாவில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக விஜித ஹேரத் மேலும் தெரிவித்தார்.

Related posts

நாட்டிற்கு மேலும் 182,400 பைஸர் தடுப்பூசிகள்

அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் செயலாளர் போல் நடித்து பொலிஸ் நிலையத்திற்கு அழைப்பெடுத்த நபர் கைது

editor

ஜனாதிபதி அநுரவின் யாழ் விஜயத்தின் போது எந்த விமானமும் பயன்படுத்தப்பட வில்லை – பாதுகாப்பு அமைச்சு

editor