உள்நாடுபிராந்தியம்

ஹோட்டலில் தங்கியிருந்த நபரொருவர் மர்மமான முறையில் மரணம்

மாவனெல்ல, பெலிகம்மன பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த 37 வயதுடைய ஒருவர் இன்று (2) காலை குளியலறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் கும்புல்ஒழுவ, புடலுஓய பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப அதிகாரி ஆவார்.

இன்று காலை அவரது அறையில் இருந்து தண்ணீர் நிரம்பி வழிவதை அவதானித்த ஹோட்டல் முகாமையாளர், குறித்த நபர் தொடர்பில் தேடிப் பார்த்தபோதே அவர் சடலமாக இருப்பது தெரியவந்துள்ளது.

அவர் தங்கியிருந்த அறையில் இருந்து அவர் மது அருந்திவிட்டு வைத்த மதுபான போத்தல், சுமார் இரண்டு இலட்சம் ரூபா பணம், ஒரு ஜோடி காதணிகள் மற்றும் பல வகையான மருந்துகளும் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து மாவனெல்ல பதில் நீதவான் விசாரணைகளை மேற்கொண்டதோடு, மரணத்திற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.

Related posts

தனக்கு ஓய்வூதியம் சரியாக வழங்கப்படவில்லை – நான் அதை கேட்கவுமில்லை – பஸ்ஸில் செல்வதற்கு எனக்கு வெட்கமில்லை – சந்திரிகா குமாரதுங்க

editor

கம்பஹா மாவட்டத்தில் மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு

இன்று இதுவரையில் 121 பேருக்கு கொரோனா [UPDATE]