உள்நாடுசூடான செய்திகள் 1பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் கரை ஒதுங்கிய வீடு – பார்வையிட திரளும் மக்கள்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் வீடு ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

இந்த வீடு யாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் இன்று (15.) அதிகாலை 3 மணியளவில் கரையொதுங்கியதாக தெரிய வருகிறது.

அண்மைக்கால கடல் நிலை மாற்றங்களினால் கடல் சீற்றங்கள், சூறாவளி, புயல், நிலநடுக்கம் போன்றவை பல தென்கிழக்கு ஆசியா நாடுகளில் ஏற்பட்டு வருகின்றன.

இதனடிப்படையில் மியன்மார், தாய்வான், தாய்லாந்து, மலேஷியா, இந்தியா, போன்ற ஏதாவது ஒரு நாட்டில் இருந்து இது வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

குறித்த வீட்டில் பௌத்த மதம் சார்ந்த பல மரபு அம்சங்கள் இருப்பதாகவும் தெரிய வருகிறது.

இதனைப் பார்வையிடுவதற்கு பெரும் எணிக்கையான மக்கள் செல்கின்றனர்.

Related posts

ஐ.தே.க வின் விஷேட மத்திய செயற்குழு கூட்டம் இன்று

புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரிக்கு Smart Class வகுப்பறைகளுக்கான தளபாடங்கள் வழங்கிய ரிஷாட் எம்.பி

editor

மஹிந்த தேசப்பிரிய தனது வீட்டின் முன் பதாகையை தொங்கவிட்டு ஆர்ப்பாட்டத்தில்..!