அரசியல்

மாவோ சேதுங் நினைவிடத்திற்கு ஜனாதிபதி அநுர அஞ்சலி செலுத்தினார்

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (15) காலை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு அடங்கலான கண்காட்சியைப் பார்வையிட்டார்.

பின்னர், சீன வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமான குங் அரண்மனை அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து சீன மக்கள் குடியரசின் ஸ்தாபகர் தலைவர் மாவோ சேதுங் நினைவிடத்திற்குச் சென்று மலர் அஞ்சலி செலுத்தினார்.

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோரும் இந்த சந்தர்ப்பத்தில் இணைந்து கொண்டனர்.

-ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Related posts

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தொடர்ந்தும் விளக்கமறியலில்!

editor

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்

editor

நாட்டில் சுபீட்சத்தை ஏற்படுத்த எதிர்க்கட்சியின் கூடிய ஒத்துழைப்பைப் பெற்றுக் கொடுங்கள் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor