உள்நாடுபிராந்தியம்

கனமழை காரணமாக ஆற்றின் நீர்மட்டம் உயர்வு – வெள்ளத்தில் மூழ்கிய பாதை

சோமாவதிய விகாரைக்குச் செல்லும் பாதையில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

புலஸ்திபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுங்காவில – சோமாவதிய வீதியில் சோமாவதிய விகாரைக்கு அருகிலுள்ள திக்கல பகுதியிலிருந்து சுமார் 2 கிலோமீற்றர் வரையிலான பாதை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

நேற்று (13) முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மகாவலி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து, இவ்வாறு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சோமாவதி விகாரைக்கு வழிபாடுகளுக்காக வந்தவர்களை, அவர்கள் பயணித்த பஸ்களின் ஊடாக வெலிகந்தை ஊடாக வெளியேற்ற பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related posts

அருவக்காடு கழிவகற்றல் நிலைய செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுக்க நடவடிக்கை

இன்றும் எரிவாயு வணிக தேவைக்காக மட்டுமே வழங்கப்படும்

சாப்பிட்ட உணவில் கரப்பான் பூச்சி – ஹோட்டல் உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

editor