உள்நாடுசூடான செய்திகள் 1

மண்ணெண்ணெய் விலை குறைப்பு – பெற்றோல், டீசல் விலைகளில் மாற்றமில்லை

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று (31) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலை தொடர்பில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

அதன்படி, மண்ணெண்ணெய் 05 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய அதன் புதிய விலை 183 ரூபாவாகும்.

இதேவேளை, பெற்றோல் மற்றும் டீசல் விலைகளில் எவ்விதமான மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டத்தாபனம் அறிவித்துள்ளது.

Related posts

வீடியோ | இறக்காமம் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஆஷிக் மீது ஒழுக்காற்று நடவடிக்கை.!

editor

சீசெல்ஸ் நாட்டிலிருந்து 254 பேர் தாயகம் திரும்பினர்

உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு விசேட ரயில் சேவை