உள்நாடு

போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 7,676 சாரதிகள் கைது

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் (29 ஆம் திகதி காலை 06.00 மணி முதல் 30 ஆம் திகதி காலை 06.00 மணி வரை) போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 7,676 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பணிப்புரைக்கு அமைய, நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே இந்த சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, மது போதையில் வாகனங்களை செலுத்திய 413 சாரதிகளும், பாதுகாப்பற்ற முறையில் வாகனங்களை செலுத்திய 49 சாரதிகளும், அதிக வேகத்தில் வாகனங்களை செலுத்திய 110 சாரதிகளும், சாரதி அனுமதிப்பத்திரங்கள் தொடர்பான குற்றங்கள் தொடர்பில் 694 சாரதிகளும், ஏனைய போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பில் 5,324 சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

அரசாங்க விடுமுறை தொடர்பான செய்தி உண்மைக்கு புறம்பானது

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வெளியிட்ட தகவல்

editor

மூச்சு விடுகிறார் தானே? ஒன்றும் பிரச்சினை இல்லையே? முகத்துக்கு கொஞ்சம் தண்ணீரை தெளியுங்கள்… ‘ (VIDEO))