உள்நாடு

அவசர திருத்த வேலை – 18 மணித்தியாலங்கள் நீர் வெட்டு

களுத்துறை தெற்கு, களுத்துறை வடக்கு, வாத்துவ, வஸ்கடுவ, மொறொந்துடுவ மற்றும் போம்புவல ஆகிய பகுதிகளுக்கு 18 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இதன்படி நாளை (26) காலை 09.00 மணி முதல் நாளை மறுதினம் (27) அதிகாலை 03 மணி வரை குறித்த பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும்.

பிரதான குழாயில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவசர திருத்த வேலைகளுக்காக இந்த நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட மின்சார வேலிகளில் சிக்குண்டு 50 யானைகள் மரணம்

editor

கொழும்பில் உள்ள சீன பிரஜைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறைவு

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் நாளை