அரசியல்உள்நாடு

கல்முனை, சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசலில் பிரார்த்தனை – நிசாம் காரியப்பர் எம்.பி பங்கேற்பு

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் இன்று கல்முனை முகைதீன் ஜும்ஆப் பள்ளிவாசல் மற்றும் சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலுக்கு விஜயம் செய்திருந்தார்.

இதன்போது பள்ளிவாசல் நிர்வாகத்தினரால் வரவேற்கப்பட்ட அவர் விசேட துஆப் பிரார்த்தனையில் கலந்து கொண்டார்.

அத்துடன் நிகழ்வில் கலந்து கொண்ட பொது மக்கள் உள்ளிட்டவர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை உட்பட பிரமுகர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

-பாறுக் ஷிஹான்

Related posts

மட்டக்களப்பில் நாளை முதல் பொதுச் சந்தைகளுக்கு பூட்டு

நாட்டைப் பற்றி சிந்திக்க வேண்டும் – சஜித்

editor

மத்ரஸா மாணவன் மரண சம்பவம் | சிசிடிவி காணொளிகளை அழித்தவர்களை கைது செய்ய உத்தரவு!