உள்நாடு

O/L மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

2024 கல்விப் ‍பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கான கால அவகாசம் இன்றுடன் (10) நிறைவடைவதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று நள்ளிரவுடன் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது முடிவடையும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக பரீட்சை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.

விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் ஆரம்பத்தில் 2024 நவம்பர் 05 ஆம் திகதி வரை வழங்கப்பட்டது.

மோசமான காலநிலை காரணமாக பின்னர், அந்த கால அவகாசம் டிசம்பர் 10 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

உடல் அடக்கத்திற்கு அனுமதி வழங்கப்பட்டமை வரவேற்கத்தக்கது : இம்ரான் கான் [VIDEO]

இன்றும் 565 பேர் பூரண குணமடைந்தனர்

கடும் பயணக்கட்டுப்பாடுகளுடன் வௌ்ளியன்று திறக்கப்படும்