அரசியல்உள்நாடு

லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவிக்கு விளக்கமறியல் நீடிப்பு

சட்டவிரோதமான முறையில் கார் ஒன்றினை பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவியை எதிர்வரும் டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அவர்கள் இருவரும் இன்று (02) நுகேகொட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மிரிஹான அம்குதெனிய பிரதேசத்தில் உள்ள முன்னாள் அமைச்சரின் மனைவிக்கு சொந்தமான மூன்று மாடி வீடொன்றில் இருந்து பதிவு செய்யப்படாத சொகுசு கார் ஒன்றினை மிரிஹான பொலிஸார் அண்மையில் கண்டுபிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும்

editor

இந்த அருள் நிறைந்த மாதம் எமக்கும் முழு தேசத்திற்கும் அமைதி, சுபீட்சத்திற்கான செய்தியைக் கொண்டு வரட்டும் – நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் பிரதமர் ஹரிணி

editor

அனைத்து பேக்கரி உற்பத்திப் பொருட்களினதும் விலையில் மாற்றம்