உள்நாடு

வாகன இறக்குமதிக்கு பல பிரிவுகள் கீழ் அனுமதி வழங்கப்படும்

எதிர்காலத்தில் வாகனங்களை எவ்வாறு இறக்குமதி செய்வது என்பது குறித்து தொழில் அமைச்சரும், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரான அனில் ஜயந்த பெர்னாண்டோ இன்று (26) விளக்கமளித்தார்.

இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

“பல பிரிவுகள் அடிப்படையிலேயே கீழ் அனுமதி வழங்கப்படும், குறிப்பாக வணிக வாகனங்கள், ஆனால் அது அந்நிய செலாவணி கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது.

ஆனால், இந்த விடயத்தை கருத்திற்கொண்டு, எத்தனை இருப்புக்கள் உள்ளன என்பது ஏற்கனவே கவனத்தில் கொள்ளப்பட்டது.

மேலும், மத்திய வங்கி சில வகையான கூடுதல் இடையகங்களை உருவாக்கியுள்ளது. அந்த வரம்புக்கு உட்பட்டு, அந்த முன்னுரிமைகளின் அடிப்படையில் முதல் கட்டத்தில் அந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது.”

“மூன்று சந்தர்ப்பங்களில் இவை வழங்கப்படவுள்ளன. ஏனெனில் இந்த உறுதிப்படுத்தல் திட்டத்தைப் பின்பற்றி படிப்படியாகச் செல்ல வேண்டும். கையிருப்பு இப்போது கணிசமான அளவு $6.4 பில்லியனாக உயர்ந்துள்ளது.

எனவே, இதை ஒரேயடியாக கைவிட்டு ஸ்திரத்தன்மையை உடைக்கமாட்டோம். சந்தை பொறிமுறையை தேவைக்கேற்ப செயல்பட அனுமதிப்போம்”

Related posts

பெண் வைத்தியரை துஷ்பிரயோகம் செய்த நபர் மீண்டும் விளக்கமறியலில்

editor

இலங்கை ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பிரித்தானியாவில் எதிர்ப்பு போராட்டம்!

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 254 ஆக அதிகரிப்பு