அரசியல்உள்நாடு

பாரிய ஊழல்கள் தொடர்பில் விசாரணை – சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் பிமல்

தேசிய வேலைத்திட்டத்தை வலுப்படுத்துவதற்கு அரச ஊழியர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (20) துறைமுகங்கள் அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தனது அதிகாரத்தின் கீழ் உள்ள அமைச்சுக்களில் கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரிய ஊழல்கள் தொடர்பில் விசாரணை செய்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

பாடசாலைகளை திறப்பதற்கு முன் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய 32 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்துவதற்கு திட்டம்!

களனி பல்கலைக்கழக மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு!