உள்நாடு

கட்டுநாயக்கவிலிருந்து மெல்போர்ன் நோக்கிப் பயணிக்கவிருந்த விமானம் இரத்து

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரத்தை நோக்கி இன்று சனிக்கிழமை (09) அதிகாலை பயணிக்கவிருந்த விமானம் ஒன்று தொழினுட்ப கோளாறு காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானச் சேவைக்குச் சொந்தமான யு.எல் 604 என்ற விமானமே இரத்து செய்யப்பட்டுள்ளது.

இதன்போது, விமானத்திலிருந்த சில பயணிகளை வேறொரு விமானத்தின் ஊடாக மெல்போர்ன் நகரத்திற்கு அனுப்பி வைக்க ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானச் சேவை நடவடிக்கை எடுத்துள்ளது.

எஞ்சிய பயணிகளை நாளை ஞாயிற்றுக்கிழமை (10) அதிகாலை 12.30 மணியளவில் அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related posts

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டம் – அமைச்சர் விஜித ஹேரத் வெளியிட்ட தகவல்

editor

கட்சி சார்பற்ற வேட்பாளராக போட்டியிடவுள்ள ரணில் விக்ரமசிங்க!

எரிபொருள் விலையில் மாற்றம் இல்லை