உள்நாடு

எதிர்வரும் 6ஆம் திகதி முதல் கடவுச்சீட்டு பெற புதிய இணையவழி முறைமை – நிலுஷா பாலசூரிய

கடவுச்சீட்டு பெறுவதற்காக புதிய இணையவழி முறைமை ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குடிவரவு குடியகல்வு இணையத்தளத்திற்கு பிரவேசித்து கடவுச்சீட்டைப் பெறுவதற்கு ஒரு திகதியை ஒதுக்கிக் கொள்ள முடியும் என குடிவரவு குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் (பதில்) டி எம் டி நிலுஷா பாலசூரிய தெரிவித்தார்.

அதன்படி எதிர்வரும் 6ஆம் திகதி முதல் புதிய வீதி இணையவழி முறைமை அமுல்படுத்தப்படவுள்ளதாக இன்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

அதன்படி, இந்த இணையதளத்தின் மூலம் எந்த நபருக்கும் நாளின் எந்த நேரத்திலும், எங்கிருந்தும் திகதி ஒன்றை முன்பதிவு செய்துக் கொள்ள முடியும். அதன்படி, இந்த இணையவழி முறையை நவம்பர் 6ம் திகதி முதல் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே, திகதியை முன்பதிவு செய்யும் எதிர்பார்ப்புடன் நவம்பர் 6ஆம் திகதிக்குப் பிறகு பொதுமக்கள் வர வேண்டாம் எனத் தெரிவிக்கிறோம்.

அதேபோல், தற்போது நவம்பர் இறுதி வரை திகதிகளை கொடுத்துள்ளோம். எனவே, டிசம்பர் முதலாம் திகதி முதல் திகதி ஒன்றை முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.

Related posts

பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்

300 மில்லியன் ரூபா பெறுமதியான உதவிப் பொருட்களை இலங்கைக்கு வழங்கிய ஜப்பான் அரசு

editor

ஜனாஸா அடக்கம் : அரசு – பிரதமர் பின்வாங்குவது மிகவும் ஏமாற்றமாகவுள்ளது